திட்டக்குடியில் பேருந்து வழித்தடத்தை அமைச்சர் தொடங்கி வைப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-17 03:19 GMT


கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் லிமிடெட் சார்பில் திட்டக்குடி - நைனார்பாளையம் (வழி ஆவட்டி கூட்டு ரோடு, சிறுப்பாக்கம், அரசங்குடி) மற்றும் திட்டக்குடி - கொரக்காவாடி (வழி வேப்பூர்) ஆகிய வழித்தடத்திலான அரசு பேருந்து சேவையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
Tags:    

Similar News