கீரை துறை பகுதியில் முதியவர் கொலை - போலீசார் விசாரணை !
கீரை துறை பகுதியில் கருவேல மரம் வெட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டு முதியவர் கொலை செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-28 12:15 GMT
முதியவர் கொலை
மதுரை கீரைத்துறை பகுதியில் இன்று மதியம் கொலை சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியில் சிந்தாமணி ரோடு ராஜம்மாள் நகர் தியாகராஜா ரைஸ் மில் அருகே சவுந்தர குமார் (50) என்பவர் கொலை செய்யப்பட்டார். கொலையான சவுந்தர குமார் என்பவர் விஜயலட்சுமி ரைஸ் மில்லின் உரிமையாளர் ஆவார். இவரது மில்லுக்கு பின்புறம் கருவேல மரம் வெட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டு கொலை நடந்துள்ளது என்று தகவல் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கீரைத்துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.