நெமிலி பேரூராட்சி அலுவலக கூட்டம்

நெமிலியில் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

Update: 2024-06-29 11:02 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பூவேந்திரன்,துணைத்தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட மூலப்பட்டு பகுதியில் பொது காரியமேடை அமைக்க வேண்டும். புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். நடேசரெட்டி தெரு மற்றும் சந்தைமேடு பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும். அருந்ததிபாளையத்திற்கு சுடுகாடு பாதை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பேரூராட்சிஉறுப்பினர்கள், இளநிலை உதவியாளர் வெங்கடேசன், சுகாதார மேற்பார்வையாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News