ஊதியூர் ஸ்ரீகொங்கண சித்தர் கோவிலில் ஆடி பவுர்ணமி பூஜை

ஊதியூர் ஸ்ரீ கொங்கண சித்தர் கோவிலில் ஆடி பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2024-07-15 17:03 GMT
காங்கேயம் அடுத்த ஊதியூர் பொன்னூதி மாமலையில் பல 100 ஆண்டுகள் பழமையான குகை கோவில் உள்ளது. இதில் முருகனின் சீடரும், பக்தருமான கொங்கண சித்தர் வாழ்ந்த குகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 20-ந் தேதி அன்று ஆடி மாத பவுர்ணமி பூஜை நடைபெற உள்ளது. கோவிலில் அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட உள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டு வழிபட்டு கொங்கண சித்தரின் அருள் பெற வேண்டும் எனவும், இரவு 10 மணி அளவில் நடைபெறும் பூஜையில் சொர்ண அபிஷேக காசும், மூலிகை ரசமும், திருநீரும் வழங்கப்படும் என்பதால் பக்தர்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News