ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது!

சூலூர் அருகே கஞ்சா விற்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-25 12:49 GMT

வடமாநில இளைஞர் கைது

கோவை:போதை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில் ஒடிசா மாநிலத்தில் விற்பனைக்காக கொண்டு வந்த நமிஷ் ராஜஹன்ஷா(23) என்ற இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மேற்படி நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த 1ம் தேதி முதல் இதுவரை போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 57 பேர் கைது செய்யபட்டு 33 வழக்குகள் பதிவு செய்து 84.320 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags:    

Similar News