திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழ கோடவுன்கள், விற்பனை கடைகளில் சோதனை நடத்தினர்.

Update: 2024-05-26 16:14 GMT

அதிகாரிகள் ஆய்வு 

திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் நகர், நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழநி உள்ளிட்ட பகுதி மாம்பழ கோடவுன்கள், விற்பனை கடைகளில் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் செயல்படும் 2 பழக்கடைகளில் சனிக்கிழமை ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையில் மாம்பழங்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து இரண்டு கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் என ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News