தீராத வயிற்று வலியால் முதியவர் தற்கொலை

கீழ்வேளூர் அருகே மது பழக்கத்திற்கு அடிமையான முதியவர் தீராத வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-06 06:10 GMT

தற்கொலை 

 நாகை மாவட்டம், கீழ்வேளூர் போலீசரகத்திற்குட்பட்ட காக்களணி தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னையன் மகன் செல்லதுரை வயது 50 செல்லத்துரை மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. மார்ச் ஒன்றாம் தேதி இரவு 7 மணிக்கு வயிற்று வலியால் அவதிப்பட்ட செல்லத்துரை மணமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த செல்லதுரை சிகிச்சை பலனின்றி மார்ச் 5 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மகன் மரியதாஸ் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News