மணல் லாரி மோதி முதியவர் பலி

பென்னேரி அருகே மணல் லாரி மோதி முதியவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Update: 2024-03-03 17:36 GMT

விபத்து 

திருவள்ளூர் பென்னேரி அருகே ஊத்துக்கோட்டை பேரூராட்சி ரெட்டித் தெருவில் வசித்து வந்தவர் குணசேகரன், 65. நேற்று காலை இவர் தன் பைக்கில் பாலவாக்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். தாராட்சி கிராமத்தில் சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வேகமாக வந்த மணல் லாரி இவர் மீது மோதியது. பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தப்பி ஓடிய மணல் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News