பெண்ணாடம்: சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

பெண்ணாடம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-15 10:10 GMT

மூதாட்டி பலி 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த மருதத்தூரை சேர்ந்த சேட்டு மனைவி பானுமதி இவர் கடந்த 2 ஆம் தேதி பெண்ணாடம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நடந்து சென்றார்.அப்போது அவ்வழியே வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார்.

அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். புகாரின் பேரில் பெண்ணாடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News