செஞ்சி அருகே விபத்து ஒருவர் பலி போலீசார் விசாரணை

செஞ்சி அருகே எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் இருந்த தடுப்புகட்டையில் மோதியதால் ஒருவர் பலி போலீசார் விசாரணை.

Update: 2024-02-09 12:02 GMT

செஞ்சி அருகே விபத்து ஒருவர் பலி போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பாஸ்கரன் (21). இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திண்டிவனம் அடுத்த பாதிரி சீனுவாசன் கிராம தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் இருந்த தடுப்புகட்டையில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News