திருஇந்தளூர் பரிமளம் ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேக யாக சாலை பூஜை
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜை நடைபெற்றது.;
Update: 2024-04-21 06:54 GMT
யாக சாலை பூஜை
108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வதும் பஞ்ச அரங்க ஆலயங்களுள் 5 வதாக போற்றப்படும் பரிமள ரங்கநாதர் ஆலயம் மகா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வதுமான, பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க ஆலயங்களுள் 5 வது ஆலயமும் சந்திரன் சாப விமோசன நிவர்த்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலயம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மகா ஸம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.