எசனை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-18 06:59 GMT

எசனை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
எசனை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, டிசம்பர்-19 ஆம் தேதி மின் நிறுத்தம் உதவி செயற்பொறியாளர் தகவல். மின் வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மின் கோட்டம் - எசனை துணை மின் நிலையத்தில் டிசம்பர்- 19 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், எசனை துணை மின் நிலையத்திற்குட்பட்ட கோனேரிப்பாளையம் , சொக்கநாதபுரம் , ஆலாம்பாடி , எசனை , செஞ்சேரி , கீழக்கரை , பாப்பாங்கரை , ரெட்டைமலைசந்து , அனுக்கூர் , சோமண்டா புதூர், வேப்பந்தட்டை , பாலையூர் , மேட்டாங்காடு , திருப்பெயர் , K. புதூர் , மேலப்புலியூர் , நாவலூர் மற்றும் காவிரி நீர் ஏற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் டிசம்பர் - 19 ம் தேதி காலை 09.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் நேரம் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News