திண்டிவனம், அவலூர்பேட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Update: 2023-11-17 04:05 GMT
மின்தடை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அவலூர்பேட்டை, ரவ ணாம்பட்டு பரையம்பட்டு, கோட்டப்பூண்டி செவரப் பூண்டி மேக்களூர், ஆதிகான் புரவடை, குந்தலம் பட்டு, கப்ளாம்பாடி, கீக்களூர், நொச்சலூர், கோவில்புறை யூர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை செஞ்சி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். இதேபோல் திண்டிவனம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திண்டிவனம், கிளிய னூர், உப்புவேலூர் சாரம், ஊரல், எண்டியூர், தென்பசார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திண்டிவனம் மின் வாரிய செயற்பொறியாளர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News