பனை மரங்களை வெட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பனை மரங்களை வெட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Update: 2023-12-01 10:35 GMT

பனை மரம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பனை மரங்களை வெட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தண்டுபத்தில் நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட செயலா் வி.பி.சக்திவேல் தலைமை வகித்தாா். விவேகானந்தன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில அமைப்பாளா் ஜெ.சசிக்குமாா் பங்கேற்று பேசினாா். பனை மரங்களை வெட்டுபவா்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. மேலும், சங்கத்தின் சாா்பில் ராஜாஜி பிறந்த நாளைக் கொண்டாடுவது, உடன்குடி, திருச்செந்தூா் பகுதிகளில் மருத்துவ ஊா்தி சேவையைத் தொடங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடன்குடி, திருச்செந்தூா் பகுதி நிா்வாகிகள் பாலசந்திரன், வாசுபாலன், பால்ராஜ், அசோக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News