பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மானாமதுரை அருகே பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-12-27 10:02 GMT

மனு அளிக்க வந்தவர்கள் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரியும் மல்லிகா என்பவரை மிரட்டி வேலூரை சேர்ந்த நல்லுசாமி என்பவர் பணம் பறித்ததாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக காவல் நிலையத்தில் எப்படி புகார் கொடுக்கலாம் என தெரிவித்து வேலுரை சேர்ந்த நல்லுசாமி, வேல்முருகன், மதன்குமார், சத்தியபிரியன் ஆகிய நான்கு பேரும் உருட்டு கட்டையால் தாக்கி, பெட்ரோல் பங்க் கண்ணாடி, கதவுகள் அகிவற்றை அடித்து நொறுக்கியதாக கூறப்படும் நிலையில் போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகாரிக்க கோரியும், இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பாதுகாப்பு கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்

Tags:    

Similar News