சாகர் மித்ரா பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

Update: 2024-02-29 04:03 GMT

ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் 

 நாகப்பட்டினம் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு (சாகர் மித்ரா 15.03.2024 -க்குள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி இளங்கலை பட்டபடிப்பில் மீன்வள அறிவியல் தகுதியில் விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில் பிற கல்வி தகுதியான வேதியல்(Chemistry) /தாவரவியல்(Botany) /உயிர் வேதியியல் (Bio-chemistry) /நுண்ணுயிரியல் (Micro biology) /இயற்பியல்(Physics)தகுதியானதாக கருதப்படும்.

மேலும் தகவல் தொழில்நுட்பம் அறிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். தகுதி வரம்புகள் விண்ணப்பதாரர் தொடர்புடைய மாவட்டத்தில் சம்மந்தப்பட்ட வட்டத்தில் மீனவ கிராமம் / வருவாய் கிராமத்தை சேர்ந்த உள்ளூர் நபராக இருத்தல் வேண்டும். சம்மந்தப்பட்ட மீனவ கிராமம் / வருவாய் கிராமம் / தாலுக்காவில் விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் சம்மந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள அண்மை கிராமம் / வருவாய் கிராமம் / வட்டத்தில் வசிக்கும் நபராக இருத்தல் வேண்டும்.

பணியிடம் நம்பியார்நகர், வானவன்மகாதேவி சிந்தாமணிக்காடு மற்றும் மணியன்தீவு மீனவ கிராமங்கள், காலியிடம் எண்ணிக்கை 04 அத்தியாவசிய தகுதிகள் வயது வரம்பு 01.07.2023 இல் உள்ளவாறு 35 வயதுக்கு மேற்படாதவாறு இருத்தல் வேண்டும். விண்ணப்பத்திற்கான நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அளிப்பதற்கான கடைசி நாள்: 15.03.2024 முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் நாகப்பட்டினம் அலுவலகத்தில் அளித்திட வேண்டும். முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலக கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம்.

Tags:    

Similar News