ஆவின் பாலகத்தில் பால் பொருட்கள் தட்டுப்பாடு

அச்சரப்பாக்கம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருள்கள் தட்டுபாடு நிலவுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Update: 2024-07-03 06:48 GMT

செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் பகுதியில் ஆவின் பாலகம் செயல்பட்டு வருகிறது. ஆவின் பாலகம் அரசு நிறுவனம் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஆவின் பொருள்களை வாங்குவது வழக்கம். அந்த வகையில் அச்சரப்பாக்கம் ஆவின் பாலகமும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த ஆவின் பாலகத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகள், ஆவின் ஐஸ்கிரீம் , ஆவின் நெய் உள்ளிட்ட பல்வேறு ஆவின் நிறுவனத்தின் பால் சார்ந்த பொருட்கள் விற்கப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த சில வாரங்களாக ஆவின் பாலகத்தில் ஆவின் பால் பாக்கெட் மட்டுமே கிடைக்கின்றன. ஆவின் தயிர் உள்ளிட்ட பொருட்கள் கூட கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். அரசு நிறுவனம் பொருட்கள் தரமாக இருக்கும் என ஆவின் பாலகத்தில் வாங்குவதாகவும் ஆனால் இங்கு பால் மட்டும் கிடைக்கிறது ஆனால் பிற பொருட்கள் கிடைக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். எனவே இதில் தமிழ்நாடு ஆவின் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடையில் அனைத்து விதமான ஆவின் பொருட்களும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News