அரக்கோணம் அருகே 3 பேரை கடித்து குதறிய தெரு நாய்

அரக்கோணம் அருகே மூன்று பேரை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-29 10:42 GMT

கோப்பு படம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி ஜெகதா. இவர்களின் மகன் திவாகர் (13).வீட்டின் அருகே சிறுவன் திவாகர் விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய் ஒன்று கை, கால்களில் கடித்துக் குதறியது. 

 மேலும் அதேப்பகுதியை சேர்ந்த பாலாஜி - கலைவாணி தம்பதியரின் 3½ வயது சிறுவன் நிர்மல் குமாரையும் நாய் கடித்தது. இதனால் சிறுவன் அலறினான். அவனது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குழந்தையின் தந்தை பாலாஜி நாயை விரட்டினார். அப்போது அவரையும் நாய் கடித்துள்ளது.

அங்கிருந்தவர்கள் நாயை விரட்டி குழந்தை மற்றும் பாலாஜியை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News