என்எல்சி நிறுவனம் சார்பில் தையல் இயந்திரம் வழங்குதல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்திய லிமிடெட் நிறுவனம் சார்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

Update: 2024-03-05 18:17 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்திய லிமிடெட் நிறுவனம் சார்பில் -CSR நிதியின் கீழ் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 2000 கைம்பெண்களுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை கழுதூர் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன வளாகத்தில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் வழங்கினார். உடன் என்எல்சி அதிகாரிகள் வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தாளாளர் CVG. வெங்கடேசன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News