செல்போன் திருட்டு வழக்கில் வாலிபர் கைது

காட்பாடியில் செல்போன் திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-05-23 07:03 GMT

வாலிபர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய வளாகத்தில் காட்பாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அந்த வாலிபர் வேலூர் சேண்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனுஷ் என்கிற மேகநாதன் (20) என்பதும், கடந்த மாதம் நடந்த செல்போன் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருட முயற்சித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News