தாமிரபரணி நதிக்கு வைகாசி ஆரத்தி தீர்த்தவாரி பெருவிழா
குழித்துறை தாமிரபரணி நதிக்கு வைகாசி ஆரத்தி தீர்த்தவாரி பெருவிழா இன்று நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-29 13:00 GMT
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறில் உற்பத்தியாகி சுமார் 62 கிலோ மீட்டர் பாய்ந்தோடி தேங்காய்பட்டிணம் கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் வைகாசி ஆரத்தி தீர்த்தவாரி பெருவிழாவையொட்டி திக்குறிச்சி மஹா தேவர் ஆலய படித்துறையில் திருகைலை புகுநெறி சிவனடியார் கூட்டம் அகில பாரத சன்னியாசிகள் சங்கம் இணைந்து அகத்தியர், தாமிரபரணி அன்னை சிலைகளுக்கு பால் ,இளநீர், தேன் , களபம் உட்பட பல வித அபிஷேகங்கள் நடைபெற்றது பக்தர்களே தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து தீப தூபங்கள் ஏற்றினர் தொடர்ந்து நதிக்கு மஹா ஆரத்தி காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்