வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் திடீர் ஆய்வு

மானிய விலையில் விவசாயிகளுக்கு விசை தெளிப்பான் வேளாண் அலுவலர் வழங்கினார்

Update: 2023-12-22 10:02 GMT

விசைதெளிப்பான் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றிய வேளாண்மை விரிவாக்கம் மையத்தில்மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மானிய விலையில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் மற்றும் உளுந்து மினிட் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து அவர் திரும்பட்டு கிராமத்தில் வேளாண்மை துறையினரால் அமைக்கப்பட்டுள்ள நெல் விதை பண்ணை மற்றும் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி வயலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் பாலமுருகன், உதவி விதை அலுவலர் பிரபாகரன், கிடங்கு மேலாளர் உமா, உதவி வேளாண்மை அலுவலர்கள் திருநாவுக்கரசு, ஹரிதாஸ், கோபிநாத், தமிழரசி மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News