ஆண்டாளுக்கு 'பிரியாவிடை' உற்சவம் வைபவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்த 'பிரியாவிடை' உற்சவ வைபவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-08 14:37 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில்108 திவ்ய தேசங்களில் முக்கியமான திருத்தலமாகும் இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் என்னை காப்பு உற்சவம் சிறப்பாக நடைபெறும். என்னை காப்பு உற்சவத்திற்கு முதல் நாள் 'பிரியாவிடை' எனும் வைபவம் நடைபெறும்.

   'பிரியாவிடை' உற்சவம் என்பது 'ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்' மார்கழி நோன்பு நோற்பதற்காக 'வடபத்ர சாயி பெருமாள்' இடத்தில் அனுமதி பெறுகிற வைபவம். பிரிய விடை கேட்பதனாலே இது 'பிரியாவிடை' என்கிற வைபமாக போற்றப்படுகிறது. இந்த உற்சவம் இன்று (08.01.2024) இரவு 8 மணிக்கு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து எட்டு நாட்களுக்கு தை பொங்கல் வரை தினமும் மாலை வேளையில் திருமுக்குளம் அருகே உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் 'மார்கழி நீராட்ட உற்சவம்' என்கிற 'எண்ணக் காப்பு' உற்சவ வைபவம் நடைபெறும்.

Tags:    

Similar News