கலவையில் முத்துமாரியம்மனுக்கு கொக்கி குத்தி மாலை அணிவிக்கும் திருவிழா

கலவையில் உள்ள முத்துமாரியம்மனுக்கு கொக்கிகுத்தி மாலை அணிவிக்கும் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-22 11:58 GMT

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மனுக்கு கொக்கிகுத்தி மாலை அணிவிக்கும் திருவிழா நடைபெற்றது. முன்னதாக ஊர் பொது மக்கள் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து படையலிட்டு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து விரதம் இருந்து மாலையிட்ட பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் நின்ற நிலையில் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News