ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-05-10 03:27 GMT

திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த மோரக்கனியனூர் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகள் கவுசல்யா (வயது 26) இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார். பணத்தை ஸ்கூட்டியில் வைத்து விட்டு, மீண்டும் வங்கிக்குள் சென்றார் .வெளியே வந்து ஸ்கூட்டியை திறந்து பார்த்த போது பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News