TNPL நிறுவனத்தில் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

TNPL நிறுவனத்தில் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.;

Update: 2024-12-01 06:12 GMT
TNPL நிறுவனத்தில் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தெற்கு வள்ளுவர் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் ராகுல் வயது 24. இவர் அருகில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று நவம்பர் 30ஆம் தேதி மாலை 3:40 மணியளவில், நிறுவனத்தில் உள்ள பாய்லர் பிளான்ட் பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராகுல் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் மூர்ச்சையாகி கிடந்த ராகுலை மீட்டு, கரூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராகுலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராகுலின் தந்தை சந்திரசேகரன் வயது 54 என்பவர் ,இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ராகுல் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Similar News