பள்ளி அருகே போக்குவரத்து இடையூறு : பொதுமக்கள் அவதி

தூத்துக்குடியில் பள்ளி அருகே போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-19 11:43 GMT

தூத்துக்குடியில் பள்ளி அருகே போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் இரு வாசல்கள் அருகிலும், பள்ளி துவங்கும் நேரம் மற்றும் விடும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. அப்பகுதியில் வசிக்கும் சிலர் சாலைகளின் இருபுறமும் கார்களை நிறுத்தி நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும், இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News