திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை

நெமிலியில் உடல்நல பிரச்னை காரணமாக திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீஸ் விசாரணை நடக்கிறது.

Update: 2024-07-01 08:54 GMT

பைல் படம் 

நெமிலி பேரூராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வந்தவர் யுவசேனா (வயது 24). திருநங்கையான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News