அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா

சடையம்பட்டில் உள்ள அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா.

Update: 2024-04-24 07:14 GMT

முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் உள்ள அரசு கல்லுாரியில், ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் மன்றங்களின் நிறைவு விழா என முப்பெரும் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். வேதியியல் துறைத்தலைவர் தர்மராஜா வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக டி.எஸ்.எம்., ஜெயின் கல்வி குழுமங்களின் செயலாளர் அசோக்குமார், எலவனாசூர்கோட்டை பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளித் தாளாளர் சிராஜீதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரியில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் சங்கர் நன்றி கூறினார்.
Tags:    

Similar News