ஸ்ரீதரணி இன்டர்நேஷனல் பள்ளியில் முப்பெரும் விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சந்தைமேடு பகுதியில் உள்ள ஸ்ரீதரணி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைப்பெற்ற மும்பெரும் விழாவில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-03 02:00 GMT

ஸ்ரீதரணி இன்டர்நேஷனல் பள்ளியில் முப்பெரும் விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சந்தைமேடு பகுதியில் உள்ள ஸ்ரீதரணி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சிறுவர் பட்டமளிப்பு விழா, தாத்தா பாட்டி களை கவுரவித்தல், சிறப்பு சேர்க்கை முகாம் ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் தமிழ்குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் தரணி தண்ட பாணி முன்னிலை வகித்தார்.

முதல்வர் சுஜா சந்திரன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், உயர்நீதிமன்ற வக்கீலுமான கே.கே.தண்டபாணி கலந்து கொண்டு சிறுவர்களுக்கு பட்டங்களை வழங்கியும், தாத்தா பாட்டி களை கவுரவித்தும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் பேசினார். நிகழ்ச்சியில் முதன்மை நிர்வாக அலுவலர் சந்தோஷா தமிழ்குமரன், இயக்குனர் டாக்டர் வள்ளி, வர்த்தக பிரமுகர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News