வீடு புகுந்து திருடிய இருவர் கைது !

மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியில் பூட்டி இருந்த வீட்டை திறந்து நகை திருடிய இருவர் கைது செய்யப்பட்டார்கள்.

Update: 2024-04-22 10:29 GMT

கைது

மயிலாடுதுறை அருகே முருக மங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி பவானி இவர் சம்பவ தினத்தன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றார். மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீடு திறந்து இருந்தும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த இரண்டரை பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பவானி மகன் அன்பரசன் குத்தலம் காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில் விசாரணை மேற்கொண்டு அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் புகழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டரை பவுன் நகையை கைப்பற்றி இதுவரையும் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News