சைக்கிள் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஓருவர் காயம்
விருதுநகர் அருகே சைக்கிள் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஓருவர் காயம் - போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 07:20 GMT
சைக்கிள் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஓருவர் காயம்- போலீசார் விசாரணை
விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டி பகுதியைச் சார்ந்தவர் ராமர் வயது 65 இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. பணிக்கு செல்வதற்காக விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்ன மருளுத்து விளக்கில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது விருதுநகர் மாவட்டம் காந்தி புரத்தைச் சார்ந்த ஹரிபிரசாத் என்பவர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டி வந்து ராமர் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ராமர் காயம் அடைந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காயம் அடைந்த ராமரின் தந்தை பாலமுருகன் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்