அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை

அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் விஜிலன்ஸ் போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2024-06-11 14:49 GMT

சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக லஞ்சம் பெறுவதாகவும் மேலும் இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்பி கணேசன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அலுவலகத்தின் நுழைவு வாயில் கேட்டை மூடி பொதுமக்ககள் யாரும் உள்ளே மற்றும் வெளியே செல்லாதபடி பூட்டினர். சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த ஊழியர்களின் டிபன் பாக்ஸ், சாமி படத்தின் பின்பகுதி, அலமாரி உள்ளிட்ட பகுதிகளிலும்,

அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப், கார் ஆகிய வாகனங்களிலும் தொடர்ந்து இரவு வரை சோதனை நடத்தினர்.இதனால் அங்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News