ராமநாதபுரம் அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

ராமநாதபுரம் பேருந்து மோதி ஒருவர் பலி மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-15 04:50 GMT

பெண் பலி

 ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது டூவிலரில் இன்று சென்றார். உச்சிப்புளி அருகே சேர்வைக்காரன் ஊருணி பகுதியில் வந்தபோது ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்து டூவீலர் மீது மோதியது.

இதில்26 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர், ராமநாதபுரம் அருகே கூரியூரைச் சேர்ந்தவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News