குடியாத்தம்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது!

குடியாத்தம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-06-28 16:19 GMT

கோப்பு படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் ஆதி, காவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்து சென்றனர்.

அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற நபரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்ததில் அவர் குடியாத்தம் சித்தூர்கேட் முனாப்டிப்போ பகுதியைச் சேர்ந்த காஜா என்கிற காதர்பாஷா (20) என்பது தெரிய வந்தது.அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் எங்கிருந்து கஞ்சா கொண்டு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News