வாலிபர் தற்கொலை

கீழ்பென்னாத்தூரில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-24 15:10 GMT

தற்கொலை 

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா கொளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். அவரது மகன் விக்ரம் (வயது 21)கொளத்தூர் ஏரிக்கரை பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News