மானாமதுரை அருகே இளைஞர் வெட்டிக்கொலை !

மானாமதுரை அருகே இளைஞர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை

Update: 2024-03-18 09:49 GMT
பலி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனி ஆண்டவர், கலைச்செல்வன் மற்றும் கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த மருது ஆகியோர் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கிருங்காங்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் வீட்டின் கொள்ளைப்புறத்தில் மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று புகுந்து மூவரையும் சரமாரியாக வெட்டி உள்ளனர், இதில் மருது முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழனி ஆண்டவர் மற்றும் கலைச்செல்வனுக்கு படுகாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக கலைச் செல்வத்தை மதுரை அரசு மருத்துவமனைக்கும் மற்றும் பழனியாண்டவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர்
Tags:    

Similar News