ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 5000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு;
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சிகள் அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆறு கடந்த சில தினங்களாக வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் காரணமாகவும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தினசரி நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது நேற்று வினாடிக்கு 3000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மார்ச் 27 இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டலு மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.