தமிழகத்தில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பேராவூரணி எம்எல்ஏ. என்.அசோக்குமார் பேசும்போது, “சேதுபாவா சமுத்திரம் ஒன்றியம், கொளக்குடி ஊராட்சியில் உள்ள முழுநேர நியாயவிலைக் கடைக்கு கட்டிடம் கட்டப்படுமா? என கேள்வி எழுப்பினார்.;

Update: 2025-03-21 23:47 GMT
தமிழகத்தில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
  • whatsapp icon
அதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளிக்கும்போது, “தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் மொத்தம் 34,908 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 6,611 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றன. 2,545 கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள கடைகளுக்கும் விரைவில் சொந்தக் கட்டிடம் கட்டப்படும். 2,500 கடைகளை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ரேஷன் கடையில் 800 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருந்தால் அந்த கடை பிரிக்கப்படும். கிராமங்களில் உள்ள கடையாக இருந்தால் 500 குடும்ப அட்டைகளுக்கு மேலாகவும், மலைப்பகுதியாக இருந்தால் 400 குடும்ப அட்டைகளுக்கு மேலாகவும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Similar News